search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dear"

    • இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
    • தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

    ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஜிவி பிரகாஷ்  இந்த கஷ்டக்காலத்தில் என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கும், நண்பர்களுக்கும் என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'
    • ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

    மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.

    படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".

    நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "'13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.

    '13' படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், 'கதிர்' படப்புகழ் பவ்யா த்ரிக்கா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
    • ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

     தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.

    தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

     

    இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம்.

    ஏப்ரல் 5 ஆம் தேதி பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் "தி ஃபேமிலி ஸ்டார்". இத்திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

    மார்ச் 29 ஆம் தேதி மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொனலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்து வெளியாகியது 'டில்லு ஸ்கொயர்' திரைப்படம். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தை போலவே இத்திரைப்படமும் வெற்றியடைந்தது. படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

     

    பாஸ்கல் வெடிமுத்து இயக்கத்தில் திரவ் , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இஸ்மத் பானு நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான் திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. கிராமத்து பின்னணியில் ஒரு குழந்தையின்மை தம்பதிகள் படும் கஷ்டத்தை கூறும் கதையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பாவ்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியது 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம். குறட்டை விடும் மனைவியும் அதனால்  கஷ்டப்படும் கணவனின் பற்றிய கதையாகும். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர்.
    • இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

    இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

    இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, 'ப்ளாக் ஷீப்' நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.

    படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துக் கொண்டு இருக்கிறது. தினமும் எக்ஸ் பக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து ப்ரொமோஷனல் வீடியோ வெளியிடுகின்றனர்.

    கடந்த வாரம் படத்தின் பாடலான மஜா வெட்டிங் பாடல் யூ டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு நாட்கள் முன் படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில் இப்பொழுது படத்தின் அடுத்த பாடலான ஸ்லீப்பிங் பியூட்டி பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகிவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • என்னைப்பார்த்து இந்த கதை கேளுங்கள் என்றார்.
    • எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம்.

    நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

    இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜீவி பிரகாஷ் பேசும் போது, "வாராவாராம் உங்கள் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இவை நான்கு ஆண்டுகளாக உழைத்து உருவான படங்கள். இந்த படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து, இப்போது ரிலீசாகி வருகிறது."

     


    "டியர் திரைப்படம் ஐஸ்வர்யா விமான பயணத்தின் போது என்னைப்பார்த்து இந்த கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, 'ப்ளாக் ஷீப்' நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
    • இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கி இருக்கும் புதிய படம் "டியர்." ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது ஆகும். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு இடம்பெற்றுள்ளார். வீடியேவில் வெங்கட் பிரபு படத்தின் டிரைலரை பார்க்க ஆரம்பிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபெல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் கல்யாணம் நடைப்பெறும் காட்சிகள் அமைந்துள்ளது. பாடல் கல்யாண சீசனுக்கு ஏற்ப மிகவும் உற்சாகத்துடனும், கொண்டாடத்துடன் அமைந்துள்ளது.

    "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்"
    • டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து மார்ச் 22 ஆம் தேதி வெளியாகியது ரெபெல் திரைப்படம். இந்த படம் மக்களிடையே கலந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    ஜி.வி. பிரகாஷ் அடுத்து நடித்த கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் ப்ரோமோ வீடியோவை இன்று மாலை வெளியிடுகிறார்கள்.

    பாட்டின் முழு வீடியோவை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்."டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
    • "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்

    ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிகேஷ் இயக்கத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் "ரெபெல்". இந்த படம் வெளியாகி மக்களிடையே கலந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இதை அடுத்து, ஒளிப்பதிவாளர் பி. வி சங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் "கள்வன்". ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

    மனைவி குறட்டை சத்தத்தினால் அவதிப்படும் கணவனை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜிவி பிரகாஷிற்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் உற்சகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை.
    • திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார்.

    இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் ஒரு பாடலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 'கேடி லேடி தள்ளிப்போடி நீதான் என் தலைவலி...' என்ற பாடல் வரியுடன் கூடிய பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த சோகபாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை. இது ஒரு திருமணமான ஜோடியின் கதை மற்றும் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் நீண்ட கால திருமணத்திற்கு என்ன தேவை என்பதை இந்தபடத்தில் அறிவுரையாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், ரோகினி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், டியரின் படத்தின் முதல் பாடலான தலைவலி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார். விண்ணுலக கவி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

    • ஆடி அமாவாசை தினமான அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவிலாகும். இந்த கோவிலில் சமய குறவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் தடுத்தாட்கொண்ட தலமாகும். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த தலத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள தலை சிறந்த ஓதுவாமூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சேர்ந்திசையில் திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஓதுவா மூர்த்திகளை மேளதாளம், நாதஸ்வரம், கைலாய வாத்தியம் முழங்க இந்து ஆன்மீக பேரவை மற்றும் சிவனடியார்கள் கூட்டத்தினர் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுக ளை கோவில் நிர்வாகத்தினர், ஒதுவாமூர்த்தி கள் நல சங்கத்தினர், இந்து ஆன்மீக அறக்கட்டளையினர் மற்றும் ஆலய ஓதுவா மூர்த்தி ராஜ்குமார் சிவனடியார்கள், சிவதொண்ட ர்கள் செய்தனர்.

    ×