search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spirituality"

    • மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
    • நேற்று இரவு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாத பூச நட்சத்திரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது.

    இதனை முன்னிட்டு நேற்று இரவு சத்திய ஞான சபையில், 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், அருட்பெருஞ் சோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதியை தரிசித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் திரு மாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    ஞானசபை உள்ள பொதுவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரி குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி யுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாக னம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 1-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடை பெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார்.

    பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாட வீதியில் சென்று வந்து நிலையை அடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா"என்ற பக்தி கோஷம் எழுப்புவார்கள். அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதிஉலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    • 17-ந்தேதி ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.
    • 20-ந்தேதி பிரதோஷம்

    14-ந் தேதி (செவ்வாய்)

    * சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிரகார விழா.

    * திருமோகூர் காளமேகப் பெருமாள் உற்சவம்.

    * சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்தி லும் பவனி.

    * திருவாடானை ஆதிரத்தினேசுவரர் பல்லக்கில் வீதி உலா.

    * மேல்நோக்கு நாள்.

    15-ந் தேதி (புதன்)

    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

    * நயினார்கோவில் நாகநாதர் காலை இந்திர விமானத்திலும், இரவு பூத வாகனத்தி லும் பவனி.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், காலை சந்திர பிரபை யிலும், இரவு சூரிய பிரபையிலும் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    16-ந் தேதி (வியாழன்)

    * காரைக்குடி கொப்புடையம்மன் தெப்ப உற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.

    * காளையார்கோவில் அம்மன் தபசுக் காட்சி.

    * திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புளி வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (வெள்ளி)

    * ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.

    * பழனி பாலதண்டாயுத பாணி தங்க மயில் வாக னத்தில் பவனி.

    * மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தி லும் புறப்பாடு.

    * திருப்பத்தூர் திருத்தணி நாதர் திருக்கல்யாணம்.

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வெள்ளி அனுமன் வாகனத்தில் வீதி உலா.

    * கீழ்நோக்கு நாள், 18-ந் தேதி (சனி)

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் இரவு தங்க கருட வாக னத்தில் பவனி.

    * நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு.

    * மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் பால்குடம் மற்றும் பூக்குழி விழா.

    * மேல்நோக்கு நாள்.

    19-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * காஞ்சி குமரக்கோட்டை முருகப்பெருமான் ரத உற்சவம்.

    * திருப்புகழுர் அக்னீசுவரர் வெள்ளி விருட்சப சேவை.

    * காட்டுபருவூர் ஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (திங்கள்)

    * பிரதோஷம்.

    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யா ணம்.

    * திருமோகூர் காளமேகட் பெருமாள் வைர சப்பரத் தில் பவனி.

    * நாங்குநேரி ராஜாக்கள் மங்கலம் பெருவேம்பு டையார் தர்ம சாஸ்தா வருசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    • முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-1 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 6.21 மணிவரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பூசம் மாலை 4.15 மணி வரை

    பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காளையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் கற்பக விருட்ச வாகனத்தில் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தேரோட்டம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம் கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-பரிசு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-இன்பம்

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- ஆர்வம்

    மகரம்-பயணம்

    கும்பம்-ஆசை

    மீனம்-உண்மை

    • ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
    • ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

    ராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் ராமானுஜரின் மருமகன் ஆவார். கிபி 1027 -ம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (ராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

    இவருக்கு "ராமானுசன் பொன்னடி" என்றும் "எதிராச பாதுகா" என்றும் "ராமானுஜர் திரிதண்டம்" என்றும் "ஆண்டான்" என்றும் பல பெயர்கள் உண்டு. ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.

    ராமானுஜர் காஞ்சிபுரத்தில் இருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். ராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

    முதலியாண்டனின் குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார்.

    இந்த விக்ரஹம் "தாம் உகந்த திருமேனி" என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்பு மிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செட்டிநாட்டு பகுதிகளில் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
    • எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.

    செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.

    முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.

    சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.

    காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

    மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.

    `கோலம்' என்றால் 'அழகு' என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.

    துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.

    இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.

    கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.

    எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.

    • ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சூரியனார் கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
    • காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 29 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி மறுநாள் விடியற்காலை 5.28 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம் : திருவாதிரை நண்பகல் 1.40 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சூரியனார் கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - மகிழ்ச்சி

    ரிஷபம் - ஆசைஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    மிதுனம் - பொறுமை

    கடகம் - ஆர்வம்

    சிம்மம் - வெற்றி

    கன்னி - இரக்கம்

    துலாம் - சுகம்

    விருச்சிகம் - நற்செயல்

    தனுசு - போட்டி

    மகரம் - பொறுமை

    கும்பம் - பெருமை

    மீனம் - பொறுப்பு

    • திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-28 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 1.08 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் ரத உற்சவம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் தேரோட்டம். வீரன்மீண்ட நாயனார் குருபூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - அனுகூலம்

    ரிஷபம் - ஆதரவு

    மிதுனம் - சுபம்

    கடகம் - வெற்றி

    சிம்மம் - தனம்

    கன்னி - நற்செயல்

    துலாம் - உதவி

    விருச்சிகம் - பாசம்

    தனுசு - பணிவு

    மகரம் - தெளிவு

    கும்பம் - பண்பு

    மீனம் - உவகை

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை காலை 6.32 மணி வரை. பிறகு திருதியை நாளை விடியற்காலை 4.56 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.02 மணி வரை. பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    இன்று அட்சய திருதியை மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவம் ஆரம்பம். வீரபாண்டி ஸ்ரீகவுமாரியம்மன் சந்நிதி தெருவில் தேரோட்டம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்- பாசம்

    கன்னி-சுகம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-அமைதி

    தனுசு-அனுகூலம்

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-உறுதி

    மீனம்-பாசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நல்ல காரியங்களை செய்யும்போது காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம்.
    • மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

    நல்ல காரியங்களை நாம் செய்யும்போது தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம். மேல்நோக்கு நாளில் சுபகாரியங்களை செய்வோம். ஆனால் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன என்று தெரியுமா...?

    அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் "சுமாரான நாள்" எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறான காரியங்களில் ஈடுபடுகிறோம்.

    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர்.

    1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம்

    2. "அதோமுக" நட்சத்திரம்

    3. "த்ரியமுக" நட்சத்திரம்.

    1. ரோகிணி,

    2. திருவாதிரை,

    3. பூசம்,

    4. உத்திரம்,

    5. உத்திராடம்,

    6. திருவோணம்,

    7. அவிட்டம்,

    8. சதயம்,

    9. உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் "ஊர்த்துவமுக" நட்சத்திரங்கள்.

    இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் "மேல்நோக்கு நாட்கள்" எனப்படும்.

    இன்னாட்களில்… "மேல்நோக்கி" வளர்கின்ற பயிர்களுக்காக விதை விதைத்தல், மரங்களை நடுதல், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள்(வீடு), உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

    இரண்டாவதாக,

    1. பரணி,

    2. கிருத்திகை,

    3. ஆயில்யம்,

    4. மகம்,

    5. பூரம்,

    6. விசாகம்,

    7. மூலம்,

    8. பூராடம்,

    9. பூரட்டாதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "அதோமுக" நட்சத்திரங்கள் எனப்படும். அதாவது… இந்த நட்சத்திரம் கொண்ட நாட்கள் "கீழ்நோக்கு நாள்" எனப்படுகிறது.

    இந்த நாட்களில்… கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

    மூன்றாவது வரும் 9 நட்சத்திரங்கள்:

    1. அஸ்வினி,

    2. மிருகசீரிஷம்,

    3. புனர்பூசம்,

    4. ஹஸ்தம்,

    5. சித்திரை,

    6. சுவாதி,

    7. அனுஷம்,

    8. கேட்டை,

    9. ரேவதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "த்ரியமுக" நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் "சமநோக்கு" நாட்கள் எனப்படும் இந்த நாட்களில்… வாகனங்கள், கார், பைக் வாங்குதல், செல்லப்பிராணிகள், ஆடு, மாடு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல்(ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

    மேற்கண்ட நாட்களை நினைவில் வைத்துக்கொண்டால், எந்த நாளில் என்ன காரியங்கள் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை, எளிதாக அறிந்து கொள்ளலாம்.

    இதுபோன்ற எளிமையான விஷயங்களை நாமே அறிந்துகொண்டு அந்த அந்த நாட்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    நமது முன்னோர் பல விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப்பூர்வமாக விளக்கியும் வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
    • இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

    விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.

    பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.

    இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-26 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை காலை 7.43 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : கார்த்திகை நண்பகல் 1.26 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திர தரிசனம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை

    இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மங்கையர்க்கரசி நாயனார் குரு பூஜை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - சுகம்

    ரிஷபம் - உயர்வு

    மிதுனம் - பரிசு

    கடகம் - மேன்மை

    சிம்மம் - நட்பு

    கன்னி - சாதனை

    துலாம் - போட்டி

    விருச்சிகம் - இரக்கம்

    தனுசு - உண்மை

    மகரம் - ஊக்கம்

    கும்பம் - நன்மை

    மீனம் - கடமை

    ×