search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab Kings"

    சில நாட்களுக்கு முன்பு தரம்சாலாவில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி அசைச்சத்தம் அடித்தார். அவர் அரைசதம் அடித்ததை வானத்தை நோக்கி துப்பாக்கி சுடுவது போன்று சைகை காட்டி கொண்டாடினார்.

    அதன்பின்பு கரண் சர்மா பந்துவீச்சில் ரிலீ ரோசோவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது விராட் கோலி துப்பாக்கி சுடுவது போன்று ஆக்ஷன் காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்டார் மீடியாவில் ரிலீ ரோசோவ் பேட்டியளித்தார். அப்போது, "எல்லா டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை, அது நடக்கவே நடக்காத ஒன்று" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் 5 அரை சதங்கள் மற்றும் ஒரு அபார சதத்துடன் 661 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் கோலி தற்போது முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
    • பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்பிடமும் வீழ்ந்து ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4- வது தோல்வியை தழுவியது.

    கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 145 ரன் என்ற எளிதான இலக்கு இருந்தது.

    ரியான் பராக் 34 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி ) , அஸ்வின் 19 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் சாம் கரண் 41 பந்தில் 63 ரன் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவேஷ் கான், சாஹல் தலா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ச்சியாக 4- வது தோல்வியை தழுவியது. ஐதராபாத், டெல்லி, சென்னை ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற்ற அந்த அணி மொத்தத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் தொடர்ந்து 2- வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 4 போட்டியில் தோற்றதால் பேட்ஸ்மேன் களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சாடியுள்ளார்.இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 144 ரன்கள் போதுமானது கிடையாது. நாங்கள் 160 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம். அங்கே தான் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் முக்கியத்து வத்தை உணர வேண்டும்.

    கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து இருக்கலாம்.

    நாங்கள் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும்.

    இதை செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் போட்டியாகும் . ஆனாலும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் போராட வேண்டும்

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. ஏற்கனவே ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

    • பஞ்சாப் அணியில் சாம் கரன் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 22 பந்தில் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஜித்தேஷ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் அசுதோஷ் சர்மா - சாம் கரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதக்கு அழைத்து சென்றனர். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    • ரியான் பராக் சிறப்பாக ஆடி 48 ரன்களை குவித்தார்.
    • சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும், டாம் கோலர் கேட்மோர் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்பாக ஆடினார்.

     


    அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்களை அடித்து அவுட் ஆனார். துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து வந்த ரோவ்மேன் போவெல் 4 ரன்களிலும், டொனோவன் ஃபெரைரா 7 ரன்களிலும் அவுட் ஆகினர். போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
    • பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. அந்த வகையில், தொடரின் அடுத்த சுற்றுக்கு வெற்றியுடன் கடக்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். தொடரின் இன்று தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம்.
    • இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசி அசத்திய சிமர்ஜித் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    "பிட்ச் ஸ்லோவாக இருந்ததை அனைவரும் நம்பினர். எனினும், பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம். பிறகு, துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த சமயத்தில் 160 முதல் 170 வரை அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம்."

    "சிமர்ஜித் சிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இதுவும் தாமதம் இல்லை. நாங்கள் இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம், ஆனால் சிமர்ஜித் சிங் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்பிக்கை இருந்தது," என்று தெரிவித்தார்.

    • கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எட்டியது. சென்னை சார்பில் கேப்டன் கெய்க்வாட் (32), டேரில் மிட்செல் (30) மற்றும் ரவீந்திர ஜடேஜா (43) சிறப்பாக ஆடினர்.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    168 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோசோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சஷான்க் சிங் 27 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஜிதேஷ் ஷர்மா கோல்டன் டக் ஆன நிலையில், அஷுடோஷ் ஷர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை சார்பில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது.
    • பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியை கடந்த போட்டியில் எதிர்கொண்ட சென்னை அணி தோல்வியை தழுவியது.

    அந்த வகையில், தோல்வியில் இருந்து மீண்டு பஞ்சாப் அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் சென்னை அணி களமிறங்குகிறது. பஞ்சாப் அணி தொடர் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    • கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார்.
    • டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 53-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தர்ம சாலாவில் நடக்கிறது.

    இதில் ருதுராஜ் கெய்க் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சாம்கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்சுக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை சி.எஸ்.கே. பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் துருப்பு சீட்டாக இருக்கிறார். மலிங்கா போன்று பந்து வீசும் அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 28 ரன் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றி யது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

    உலக கோப்பை விசா நடைமுறைக்காக நாடு திரும்பியதால் அவர் சென்னையில் கடந்த 1-ந் தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது அவர் அணியோடு இணைந்துள்ளார். இதனால் இன்று விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தை மாதிரி என்று பதிரனா தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது:-

    டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (டோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.

    வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன்.

    இவ்வாறு பதிரனா கூறினார்.

    பதிரனா கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டத்தில் 19 விக்கெட் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    ×