2025 REWIND: யார் அந்த SIR? - அண்ணா பல்கலை. விவகாரத்தில் அ.தி.மு.க.-வின் போஸ்டர்கள்

யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்தனர்.
2025 REWIND: யார் அந்த SIR? - அண்ணா பல்கலை. விவகாரத்தில் அ.தி.மு.க.-வின் போஸ்டர்கள்
Published on

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து யார் அந்த சார்?' என்ற கேள்வி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.

இதற்கு பதில் அளித்த தி.மு.க. அமைச்சர்கள், அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'யார் அந்த சார்?' என்று கேள்வி எழுப்பி, அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றப் பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)? #SaveOurDaughters என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com