
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி
விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி
சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.
மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைப்பு