
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், சட்டமன்றத்திற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருகை
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் 5-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
கவர்னர் உரையை வாசித்து முடித்ததும் அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும்.
கவர்னரை சிவப்புக் கம்பள விரிப்பில் சட்டசபைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சாந்தி அழைத்து வருவார்கள். அவைக்கு வந்ததும் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படும். அதன் பின்னர் உரையை ஆங்கிலத்தில் கவர்னர் அர்லேகர் வாசிப்பார்.
இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் நிலையில், கவர்னர் அர்லேகர் 9.50 மணிக்கு வருகை தருவார். அவருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.