என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

துரோகி என்ற வார்த்தைக்கு இ.பி.எஸ். பெயர்தான் ஞாபகம் வரும் - டிடிவி தினகரன்
- எடப்பாடி பழனிச்சாமி தன்னை தானே ஓநாய் என்று ஒப்புக்கொள்கிறார்.
- லாட்டரி சீட்டு அடித்தது போல குருட்டு யோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி தன்னை தானே ஓநாய் என்று ஒப்புக்கொள்கிறார். யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும். லாட்டரி சீட்டு அடித்தது போல குருட்டு யோகத்தில் முதலமைச்சர் ஆனவர் அவர். துரோகி என்ற வார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமியின் பெயர்தான் ஞாபகம் வரும்" என்று தெரிவித்தார்.






