அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர்-துணை முதல்வரிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்

அதிமுக தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார். #LSPolls #ADMK #ADMKManifesto
அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர்-துணை முதல்வரிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்
Published on

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து முடிக்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வில் தேர்தல் கூட்டணியில் இன்று அல்லது நாளை தேமுதிக இணைந்ததும் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். அதன்பின்னர் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக எந்தெந்த தொகுதியில் யார்-யார் போட்டியிட உள்ளனர் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com