என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்

சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா
பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா
Published on
Summary

தனக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து உதவி கோரியது தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் பயின்ற பள்ளித் தோழர் அஸ்கரலி வோஹ்ரா (81).

இவர் தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு

மும்பை நகரின் பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு தனது நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு தெரியாமல் நிலத்தை பிரித்து, 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நில ஆக்கிரமிப்பில் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு

பல ஆண்டுகளாக அரசுத் அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த 81 வயதான வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

விசாரணைக்கு உத்தரவு

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் இச்சம்பவத்தில் மின்னல் வேகத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

புகார் தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com