

டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தியா, ரஷியா, சீனா உள்பட 11 உறுப்பு நாடுகள் மற்றும் 10 நட்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.
இதில் பல்வேறு நாட்டுகள் அதிபர்கள், பிரதமர்கள், துணை அதிபர்கள், மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். உச்சி மாநாட்டில் நேற்று அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடந்த அமர்வில் தலைவர்கள் பங்கேற்று உரையாடினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
மேலும் மாநாட்டின் டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 140 அம்சங்களை கொண்ட இந்த பிரகடனத்தில் காசா போர் நிறுத்தம், ஐ.நா.சபையில் சீர்திருத்தங்கள், எல்லை கடந்த பரிவர்த்தனை, எரிசக்தி பாதுகாப்பு, வரி விதிப்புக்கு எதிர்ப்பு, பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் போர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றன.
டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் 2-வது மற்றும் கடைசி நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டு இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள், நட்பு நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் மாநாட்டு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு காலை 10 மணி முதல் வரத் தொடங்கினர். அவர்களை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அதன்பிறகு தலைவா்கள் அதிகாரப்பூா்வமாக குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சிக்கான எதிர் காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் அமர்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மீண்டும் ஓன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியாவின் தலைமை யின் கீழ் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்ன்மை ஆகிய 4 முக்கிய அம்சங்களில் எங்கள் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளோம். உங்கள் ஒத்துழைப்பு-ஆதரவுடன், நமது கூட்டுப் பார்வையை அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு சூழலாக மாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று உலகில் பதற்றங் கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே பிரிக்ஸ் குழுவிற்குள் மீள்திறனை வலுப்படுத்து வதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்.
இதன் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்வதற்கும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு குறித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மைக்காக முன்கூட்டியே எச்சரிக்கும் தரவு ஒருங்கி ணைப்பு வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் தளவாட விநி யோகச் சங்கிலி ஒத்து ழைப்புக் கட்டமைப்பு என்பது நமது விநியோகச் சங்கிலிகளை மேலும் நம்பகமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும்.
டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்களை ஆயுதமாக்குவது நமது கூட்டு முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். பொது வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆயுதமாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். போர்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
பிரிக்ஸ் அமைப்பின் மீதான தெற்குலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தெற்குலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் வலிமை என்பது நமது பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பில்தான் உள்ளது. நாம் வெவ்வேறு சூழல்களைச் சார்ந்த வர்களாக இருக்கலாம். ஆனால் ஒத்துழைப்பின் மூலம் ஒன்றிணைந்து உயர்ந்து, மனிதகுலத்திற்காக மலர்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களை இந்த கூட்டம் ஒருங்கிணைத்து உள்ளது. பிரிக்ஸ் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.
பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு என்பது அரசாங்கங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயன்று உள்ளோம். இதில் எங்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்களும் தீவிரப் பங்கேற்பாளர்களாக திகழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த அமர்வு முடிந்த பிறகு டெல்லி கூட்டு பிரகடனம் வெளியிடப்படும். அதனுடன் மாநாடு நிறைவு பெறும்.
இன்றைய மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி 7 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ரம போசா மற்றும் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.