2-ம் கட்ட உள்கட்சி தேர்தல்: அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

2-ம் கட்ட தேர்தல் அமைப்பு ரீதியாக சென்னை உள்பட 40 மாவட்டங்களுக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கிளை கழகம் முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் வரையிலான அடுத்த கட்ட தேர்தல் கடந்த 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற்றது.

இதன் 2-ம் கட்ட தேர்தல் அமைப்பு ரீதியாக சென்னை உள்பட 40 மாவட்டங்களுக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் வந்து ஆலோசனை நடத்தினார். இதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com