சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. அடுத்தடுத்து இப்படி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான உத்தரவு பிறப்பித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
Published on

சென்னை:

சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான விசாரணையின் போது 11-ந்தேதி நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

மேலும் அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. அடுத்தடுத்து இப்படி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான உத்தரவு பிறப்பித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவாக கருதப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com