புதுச்சேரியில் இன்று பாஜக பந்த்- தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய 4 பேர் கைது

புதுச்சேரியில் இன்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #BJPBandh #PuducherryBandh
புதுச்சேரியில் இன்று பாஜக பந்த்- தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய 4 பேர் கைது
Published on

சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாஜக சார்பில் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை காரணமாக புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை. பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. போராட்டத்தினால் வன்முறை உருவாகாமல் தடுப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com