நடிகர் குண்டு கல்யாணம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அறிவிப்பு

நடிகர் குண்டு கல்யாணம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
நடிகர் குண்டு கல்யாணம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அறிவிப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால், இன்று முதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.

மேலும் இவர் ஏற்கனவே வகித்து வந்த தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK

X

Maalai Malar
www.maalaimalar.com