திருமணத் தடை அகலும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவிற்கு குரு பார்வை உள்ளதால் சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும். நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் வாழ்க்கைத் துணையாக வர வாய்ப்புள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து லாபத்தை அதிகரித்துக் கொள்வார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். குழந்தை பேறு, திருமணம், வீடு, வாகன யோகம் என கடக ராசிக்கு அடுத்தடுத்த இன்பங்கள் வந்து சேரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. உடல் அசதி அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406