காரியத் தடை நீங்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனுக்கு பாக்கியாதிபதி சனியின் பார்வை உள்ளது. உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்புடன் கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஜாமீன் பொறுப்பு ஏற்ற தொகை கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் பெரும் பணம் கிடைக்கும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். வழக்குகள் சமாதானத்திற்கு வரும். வெகு விரைவில் குரு 3ம்மிடம் நோக்கிச் செல்வதால் விலகிச் சென்ற உடன் பிறப்புகள் மீண்டும் இணைவார்கள்.
தம்பதிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவும். பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் நேரம். வாடகை வீட்டுத் தொல்லை இனி இல்லை. பணவரவு பல வழிகளில் வரத்தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத் தடை அகலும். பிள்ளைகள் தொழில் உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். தினமும் சிவ கவசம் படிக்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406