அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ‘கூகுள் குரோம்’ வெப் பிரவுசரை கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட்டிக்கு போட்டியாக குரோமை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது கூகுள் குரோமின் மேம்பட்ட தானியங்கு நிரப்புதல் வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் அந்நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. இந்த அப்டேட் மூலம், குரோம் வெப் பிரவுசரில் உள்ள ஆன்லைன் படிவங்களை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் நிரப்ப அனுமதிக்கிறது.
கூகுள் வாலட் போன்ற பிற செயலிகளுடன் இந்த அம்சம் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதுதான் இதன் மிகப்பெரிய கூடுதல் அம்சமாகும்.
கூகுள் வாலட்டில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இப்போது Chrome-இல் அணுகி, மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள வலைத்தளங்களில் படிவங்களைத் தானாக நிரப்ப அதைப் பயன்படுத்த முடியும்.
இதில் அடையாள ஆவணங்கள், பயணச்சீட்டுகள், நுழைவுச்சீட்டுகள், ஓட்டுநர் உரிம விவரங்கள், கடவுச்சீட்டுத் தகவல்கள், அறியப்பட்ட பயண எண்கள் மற்றும் கட்டணத் தகவல்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், புதிய தகவல்களைச் சேமிப்பதை Chrome எளிதாக்குகிறது. பயனர்கள் முதல் முறையாக ஆதரிக்கப்படும் விவரங்களை கைமுறையாக உள்ளிடும்போது, எதிர்காலத்தில் அவை தானாகவே நிரப்பப்படும் வகையில், அவற்றை Google Wallet-இல் சேமிக்குமாறு Chrome பரிந்துரைக்கும்.
மிக முக்கியமாக, சேமிக்கப்பட்ட தரவு குறியாக்கம்(encrypted) செய்யப்பட்டுள்ளது என்றும், தானியங்கு நிரப்புதல் பயன்பாட்டின் போது மட்டுமே அது அணுகப்படும் என்றும் கூகுள் கூறியுள்ளது.
பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப சேமிக்கப்பட்ட தகவல்களைத் திருத்தவோ, புதுப்பிக்கவோ அல்லது நீக்கவோ செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் தற்போது உலகெங்கிலும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் குரோம் பயனர்களுக்கு புதிய ஆட்டோஃபில்(Autofill) அம்சங்களை படிப்படியாக வெளியிட்டு வருகிறது.