யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஸ்பெயினின் பவுலா லோபஸ்-லுசியா ரோட்ரிக்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 14-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.