களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலராசின் அரினா சபலென்கா, ரொமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சொரானா சிர்ஸ்டி 2-6, 6-3, 7-5 என வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.