கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் இன்று நடந்த போட்டியில் நம்பர் 2 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெல்ஜிய வீராங்கனை 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரிலும் எலினா ரிபாகினா மூன்றாவது சுற்றில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.