துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
3-வது காலிறுதியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், சீன வீராங்கனை குயின்வென் ஷெங்குடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.