தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றில் நேரடியாக களமிறங்கிய நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், இத்தாலி வீராங்கனை எலிசபெட்டா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி வீராங்கனை எலிசாபெட்டா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் கத்தார் ஓபன் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனையான கோகோ காப் வெளியேறினார்.