பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த முடிவால் வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோயுள்ளது.
இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வெள்ளி பதக்கம் தொடர்பாக நாங்கள் அனைவரும் கேட்க விரும்பிய செய்தி இது அல்ல. ஆனால் வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் எங்களுக்கு ஒரு சாம்பியன். உங்களின் முயற்சிகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Not a News we all wanted to here on your #Silver ?But @Phogat_Vinesh you are a champion for us & we are proud of you on your efforts.#Respect #wrestling #Olympics#vineshphogat pic.twitter.com/WolXfuSdgs