இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன், ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது.
அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, பிளெசிங் முசராபானி, பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னெட் சிறப்பாக விளையாடி 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே 13.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மருமாணி 11 பந்தில் 21 ரன்களும், பிரெண்டன் டெய்லர் 30 பந்தில் ரன்களும் எடுத்தனர். டெய்லர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.