இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணி, ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.
அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, பிளெசிங் முசராபானி, பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.