சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஐதராபாத் 194 ரன்கள் சேர்த்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே. களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சிஎஸ்கே-வால் ரன்கள் அடிக்கமுடியவில்லை. இதனால் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
2020-க்கும் பிறகு சிஎஸ்கே-வுக்கு சேஸிங் என்றாலே ஜுரம்தான் என்பது தெரியவந்துள்ளது. 2020-ல் இருந்து 18 போட்டிகளில் 175 ரன்களுக்கு மேலான சேஸிங்கை துரத்தியுள்ளார். ஆனால், இதில் 16 முறை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 175 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயித்தால் சி.எஸ்.கே. திணறி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.