ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் 2 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது.
மும்பை அணியில் பெரும்பாலான வீரர்கள் இணைந்த நிலையில், முன்னை பந்துவீச்சாளர் பும்ரா அணியில் இணையாது இணையத்தில் பேசுபொருளானது. பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இணைந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.