இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் (151), டேவன் கான்வே (157) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது.
பின்னர் இன்றைய 2-வது நாளில் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பென் டக்கெட், எமிலியோ கே ஆகியோர் களமட் இறங்கினர். எமிலியோ ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து டக்கெட் உடன் ஜேக்கப் பெத்தேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பென் டக்கெட் அபாரமான விளையாடி 88 பந்தில் சதம் விளாசினார். பெத்தேல் 60 பந்தில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து 30 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.