விளையாட்டு

Macau Open பேட்மிண்டன்: அரையிறுதியில் அஷ்மிதா சலிஹா தோல்வி

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, தென் கொரியாவின் பார்க் கா-உன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பார்க் கா-உன் 21-17, 21-9 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.