சுமாரான வாரம். ராசிக்கு சூரியனின் சம சப்தம பார்வையும் சனியின் பத்தாம் பார்வையும், செவ்வாயின் 8ம் பார்வையும் உள்ளது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மனஉளைச்சல் ஏற்படலாம். சனி, செவ்வாய் சம்பந்தம் ராசிக்கு இருப்பதால் செயற்கை முறை கருத்தரிப்பை ஒத்தி வைக்கலாம். உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுவது நல்லது. நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். கடன் பிரச்சினை குறையும். வீடு, நிலம், வாகனம் போன்றவைகள் வாங்குவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்கிரனின் சமசப்தம பார்வை உள்ளது. தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகள், மகனுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். ராகு, கேது மற்றும் குருவின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.தினமும் பட்சிகளுக்கு உணவிடவும்.
புதிய சிந்தனைகள் உதயமாகும் வாரம். ராசியில் ராகுவும் ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளது. வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். கடன் நிவர்த்தி, கடன் தள்ளுபடி போன்ற சகாயமான பலன்கள் நடக்கும். சிலருக்கு ஒரு விபரீத விளைவு ஏற்பட்ட பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும். சிலர் அதிர்ஷ்டவசமாக தலைமுறைக்கும் தேவையான வருமானத்தை சம்பாதித்து விடுவார்கள்.ராசிக்கு இரண்டில் சனி பகவான் நிற்பதால் கண்கள் தொடர்பான சிகிச்சைகளில் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை புனரமைப்பீர்கள். 21.6.2026 அன்று மாலை 3.40 முதல் 24.6.2026 நள்ளிரவு 12.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காலபைரவர் வழிபாட்டால் மேன்மையான பலன்களை அடைய முடியும்.
திருப்புமுனையான வாரம். ராசியில் உள்ள சனி பகவானை குரு பார்ப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். வியாபாரம் பெருகும். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். உத்தியோகம் அல்லது தொழிலில் மாற்றங்களை சந்திக்க நேரும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள். இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத்தரும். உங்கள் ராசிக்கு இது ஜென்மச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சனி, செவ்வாயை பார்ப்பதால் வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். திருமணத்தடை அகலும். 24.6.2026 நள்ளிரவு 12.53 முதல் 26.6.2026 பகல் 12.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.