வழிபாடு

திருவையாறு சத்குரு ஆஸ்ரமத்தில் தியாகராஜருக்கு ஆனி மாத பஞ்சமி வழிபாடு

ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆனி மாத பஞ்சமியை முன்னிட்டு திருவையாறு சத்குரு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜருக்கு பரம்பரை பூஜா ஸ்தானிகர் தியாகராஜ சர்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பித்தார். தொடர்ந்து, கர்நாடக இசை கலைஞர்கள் தியாக பிரும்மத்தின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் மற்றும் சம்பிரதாய கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.