வழிபாடு

ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடத்தில் பிரத்யங்கிரா யாகம்

காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது. காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது.

மாலை மலர்

கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில், ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. அங்கு ஆடி அமாவாசையையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு பிரத்தியங்கரா தேவி யாகம் நடந்தது. இதனை, மடத்தின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார்.

யாக குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு, அதில் நெய் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், கோவை, விருதுநகர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக மடத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகிற 50-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.