பராபவ ஆண்டு ஆனி-19 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை காலை 10.25 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவோணம் காலை 11.19 வரை பிறகு அவிட்டம்
யோகம் : மரண / சித்தயோகம்
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதோற்சவம், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும், ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் திருமஞ்சனம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.
மேஷம்-நன்மை
ரிஷபம்-செலவு
மிதுனம்-ஆதாயம்
கடகம்-சிந்தனை
சிம்மம்-ஓய்வு
கன்னி-தாமதம்
துலாம்-வரவு
விருச்சிகம்-துணிவு
தனுசு-லாபம்
மகரம்-மேன்மை
கும்பம்-பாசம்
மீனம்-பண்பு