ஆன்மிகம்

மங்களம் தரும் அபிராமி அம்பிகை ஸ்துதி

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அபிராமி அம்பிகை ஸ்துதியை சொல்லி வந்தால் துன்பம் விலகி நன்மைகள் உண்டாகும்.

காலையாத கல்வியும் குறையாத

வயதுமோர் கபடு வாராத நட்பும்

குன்றாத வளமையுங்குன்றாத இளமையும்

கழுபிணி யிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்

மாறாத வார்த்தையும் தடைகள் வாராத

கொடையும் தொலையாத நிதியமும்

கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தின் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம்

அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே.