அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போருக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி போரில் இணைந்துள்ளது.
இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையம் குறிவைக்கப்பட்டு ஹவுதி அமைப்பு அனுப்பிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.