உலகம்

இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - மூத்த துறவி கைது

ஒரு புகழ் பெற்ற முதன்மை துறவியாக உள்ளார்.

இலங்கையில் 15 வயதான சிறுமிக்கு மூத்த துறவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார்.

மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா (71), என்பவர் இலங்கையில் உள்ள ஒரு புகழ் பெற்ற முதன்மை துறவியாக உள்ளார்.

தகவல் தெரிந்த காவல்துறையினர் விசாரணையின் போது அனுராதபுரத்தியில் ஒரு பழமையான கோவில் உள்ளதாகவும், அங்கு வழக்கம்போல் 15 வயது சிறுமி கடவுளை வழிபட சென்றபோது மூத்த துறவியான ஹேமரத்னா என்பவர் கோவிலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குழந்தைக்கு எதிரான வன்முறையில் ஹேமரத்னாவுடன் சேர்ந்து சிறுமியின் தாயும் உடந்தை என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயையும், பாலியல் துன்புறுத்தல் செய்த பல்லேகம ஹேமரத்னா ஆகிய இருவரையும் அனுராதபுரம் காவல் நிலையம் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததனர்.

மேலும் இது குறித்த விசாரணை தொடர்ந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்