சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வான் அளவிற்கு உயர்ந்து நிற்கும் 109 மாடி கட்டிடத்தின் மீது சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளாகி மோதியது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள். அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனரா? என்று தெரியவில்லை.
அதேவேளை கட்டிடத்தில் உள்ளவர்கள் பயந்து அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். இதனால் அந்த கட்டிடம் இருக்கும் தெருவில் மக்கள் தலையாக தெரிந்தது.
தீயணைப்புப்படையினர், மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.