பிரதமர் நரேந்திர மோடிக்கு, நார்வேயின் மிக உயரிய குடிமை விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட்', வழங்கப்பட்டது. இது பிரதமர் மோடிக்குக் கிடைக்கும் 32வது சர்வதேச கௌரவமாகும்.
கிராண்ட் கிராஸ் என்பது ராயல் நார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதின் மிக உயர்ந்த தரமாகும். நார்வேயின் நலன்களையும் சர்வதேச உறவுகளையும் மேம்படுத்துவதில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக இது வழங்கப்படுகிறது.
இருதரப்பு உறவுகளுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளையும், அவரது தொலைநோக்கு தலைமையையும் அங்கீகரிக்கும் விதமாக, ஒரு நாள் முன்னதாக மோடிக்கு ஸ்வீடனின் மதிப்புமிக்க 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, வெளிநாட்டு அரசாங்க தலைவர்களுக்கு ஸ்வீடன் வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகும். பிரதமர் மோடி ஸ்வீடனில் இருந்து இரண்டு நாள் பயணமாக நார்வே சென்றடைந்தார். மோடியின் நார்வேக்கான முதல் பயணம் இதுவாகும், மேலும் 43 ஆண்டுகளில் ஒரு இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு செல்வதும் இதுவே முதல் முறையாகும்.