தலைப்புச்செய்திகள்

வங்கி வேலைவாய்ப்பு: நாடு முழுவதும் 6,715 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தகுதியான விண்ணப்பதாரர்கள் BPS அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ibps.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,715 துணை மேலாளர் (PO) மற்றும் மேலாண்மை பயிற்சிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு முகமை https://www.ibps.in வெளியிட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்:

6,715

பதவியின் பெயர்:

துணை மேலாளர் (PO) / மேலாண்மை பயிற்சி (MT)

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்:

ஜூலை 1, 2026 (இன்று)

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:

ஜூலை 21, 2026

முதல்நிலைத் தேர்வு:

ஆகஸ்ட் 2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் BPS அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ibps.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இணையதளத்தில் உள்ள விரிவான அறிவிப்பைக் கண்டு தெரிந்து கொள்ளலாம். வங்கித் துறையில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.