தமிழக முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கி கவரவித்து வருகிறார். அந்த வகையில் 4-வது ஆண்டாக பரிசளிப்பு விழா விரைவில் நடக்க இருக்கிறது.
இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்தவில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பரிசு வழங்க இருக்கிறார். இதற்காக மாவட்ட அளவில் மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் பணியில் த.வெ.க. நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகு, தேதி முடிவு செய்யப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது.