தமிழக வெற்றி கழக தலைவர் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் டெல்லியில் கரூர் கூட்டநெரிசல் வழக்கில் டெல்லியில் சிபிஐ முன் நேரில் ஆஜரானார்.
அங்கிருந்த சென்னை வந்த பிறகு விஜய் முதல் முறையாக இன்று பொது வெளியில் தோன்றியுள்ளார்.
ரம்ஜானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு தவெகவால் மகாபலிபுரத்தில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமிய சகோதரர்களுடன் தலைப்பாகை அணிந்து பந்தியில் தரையில் அமர்ந்து நோன்பு உணவு சாப்பிட்டார்.
இதில் தவெக முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த இப்தார் விருந்தில் கலந்துகொள்ள விஜய் இன்று முழுதும் விரதம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.