தமிழக செய்திகள்

Tamil News Live: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் நிறைவேறியது - 12 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

அமைச்சர் மரிய வில்சன் உரை

வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.

அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.

30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு.

குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.

பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி உரை தொடங்கினார் நிதியமைச்சர் மரிய வில்சன்

சட்டரீதியான போராட்டம் நடத்தி தேனி மக்களுடன் அரசு உறுதுணையாக இருக்கும்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளியேற்றம் என அறிவிப்பு, முதல்வர் அறிவுறுத்தல்படி சட்டரீதியில் போராடுவோம் - அமைச்சர் ஆதவ்

மலை கிராம மக்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் திங்கட்கிழமை விவாதத்திற்கு ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு

3 தலைமுறையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதி என கூறி வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து முற்றுகை - திமுக எம்எல்ஏ

தேனி ஆட்சியர் அலுவலகம் முன் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் - அதிமுக கவனஈர்ப்பு

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை எடுத்து கொள்கிறேன் - சபாநாயகர்

போதைப்பொருள் குறித்து புகார் தந்த மாணவன் குறித்து காவல்துறை தகவலை கசியவிட்டதால் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.

போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் தந்த அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை.

புகார் தந்தவரின் தகவலை அலட்சியமாக போலீசார் கசியவிட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் - உதயநிதி

கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேறியது.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை

ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.

2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.

தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை

இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.

பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.

பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.

தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.

5, 6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.

அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.

உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?

மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை

மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.

அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.

2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும்.

ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

Delimitation அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறும் கூறினோம்.

33% மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனமுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது. 7.18 விகிதாசாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி தவெக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது - உதயநிதி

திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது திமுக தான்.

தொகுதி மறுவரையறையின் ஆபத்தை இந்தியாவிற்கே கூறியது திமுகதான்.

எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாசாரம் குறையக்கூடாது என திமுக பேரவையில் தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதே திமுக நிலைப்பாடு.

வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது - ராஜேஷ்குமார்

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் ஏன்? - சபாநாயகர் விளக்கம்

வரும் முன் காக்க எச்சரிக்கை நடவடிக்கையாகவே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய் - சபாநாயகர்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு - ராஜேஷ்குமார்

2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்கக்கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு - ஜவாஹிருல்லா

தமிமுன் அன்சாரி உரை

தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது, அதே சூழல் இங்கும் வரும்.

மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு.

அமைச்சர் ஷாஜகான் உரை

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. பாஜக வெற்றி பெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.

பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவது வேறு. பிரதமர மோடியும் அமித்ஷாவும் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.

மகளின் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.

இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர் - அமைச்சர் வன்னிஅரசு

அமைச்சர் வன்னிஅரசு உரை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் தனித்துவமானது, மகத்துவமானது.

தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு

அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரித்தார்.

எடப்பாடி பழனிசாமி உரை

விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது.

அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது - எடப்பாடி பழனிசாமி

செவி வழி செய்தியை வைத்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கொண்டு வந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் - பாமக எம்எல்ஏ

மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பாமக எதிர்க்கும்.

தொகுதி மறுவரையறையை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்தால் பாமக கடுமையாக எதிர்க்கும் - எம்எல்ஏ கணேஷ்குமார்

தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்துகிறார்கள் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்

பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை

சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டுவரும் அவசரம் என்ன?

மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டுள்ளது.

பெண்ணுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.

தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரை

சட்டமுன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது?

தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது சிறப்பானது என்பதில் மாற்றில்லை.

10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர்.

முதல்வருக்கும் அரசியலில் பெண்களை ஊக்கப்படுத்தும் கட்சியினருக்கும் என் வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7:2 என்ற வகையிலேயே தொடர வேண்டும். அது மாற்றப்படக்கூடாது.

தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவில் மத்திய அரசு சட்டமுன்வடிவு இதுவரை கொண்டுவரப்படவில்லை - பிரேமலதா

தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா. நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது - எம்எல்ஏ ராமச்சந்திரன்

தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ ராமச்சந்திரன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசாமி

பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.

மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன்ற தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்களே எல்லோரும் பேச நேரம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 800-க்கு மேல் உயர்த்தினால் எப்படி பேச முடியும்?

பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.

மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன் தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

மற்ற கட்சிகள் பேசிய பிறகு திமுக உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில்

முதல்வர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது - செல்லசாமி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 3ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் - முதலமைச்சர் விஜய்

தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனையில் 6 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம் - முதலமைச்சர் விஜய்

அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம்.

நாட்டின் மக்கள்தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் விஜய்

பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பெண் அதிகாரம் பெற்றால் ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது நாடே உயர்கிறது - முதலமைச்சர் விஜய்

2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கு தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய்

பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.

பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல சமூக நீதி.

மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ , பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயரி வந்துவிடும் என நினைப்பர் - முதலமைச்சர் விஜய்

நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது - முதலமைச்சர் விஜய்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது

தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியதுதமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்