தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு பதவி ஏற்றபின்னர், தமிழ்நாடு சட்டசபையின் 17-வது கூட்டம் இன்று கூடியது.
சட்டசபை கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தொடர்ந்து அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய கவர்னர் அர்லேகர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.