தமிழக செய்திகள்

பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலி..!

பெரம்பூர் மக்களுக்கான இந்த பிரத்யேக செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய் அறிவுறுத்தலின் பேரில் பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலியை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.

மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.

மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சி நிர்வாகத்துடன் இணைக்கும் புதிய முயற்சி என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.