பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம் பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை பல்லடம் வட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.