தமிழக செய்திகள்

யாருடனும் கூட்டணி வேண்டாம் - மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த ஆ.ராசா

கூட்டணி இன்றி வரும் காலங்களில் தேர்தல்களை தனித்து களம் காண வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கூட்டணி இன்றி வரும் காலங்களில் தேர்தல்களை தனித்து களம் காண வேண்டும் என்று அவர் கூறினார்.