வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக தவெகவினர் லஞ்சம் பெற்றதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
* வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
* நேற்று மாலை முதல் வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.
* அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மிகவும் நேர்மையாக நடந்து வருகிறது.
* மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லை. விதிகளுக்கு உட்பட்டே நியமனம் செய்யப்பட்டனர்.
* யாராவது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பணம் பெற்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* யாருடைய பெயரையாவது தவறாக பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* இதுவரை 3 மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* தற்போது நடைபெறும் நியமனம் 6 மாதங்களுக்கு தற்காலிகமானது.
* யாராவது பணம் வாங்கியிருந்தால், பணம் அளித்தவர்கள் புகார் அளிக்கலாம்.
* அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையூறாக ஆய்வு செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* ஆளுநர் ஆய்வு செய்வதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. தேவையின்றி ஆய்வு நடத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.