தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்று விட்டதாக எழுந்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொழில்முறை அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்த கேள்வியை சட்டப்பேரவையில் எழுப்பத் தயாரா? நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
* எந்த நேரத்தில் தொழில் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது என்பதற்கு ஆதாரம் உள்ளது.
* சட்டப்பேரவையில் யாராவது இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தகுந்த பதிலை கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.