தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகான தற்போதைய சூழல் குறித்து ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது:-
மெஜாரிட்டி எண்கள் கிடைக்கவில்லை. அமைக்கப்படும் எந்த அரசாங்கமும் பல்வேறு இழுபறிகள் மற்றும் அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும்.
குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் புதிய தேர்தல்களை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம்.
'வாக்குக்குப் பணம் இல்லை' என்ற மிகக் கடுமையான அமலாக்கத்துடன் இதைசெயல்படுத்த வேண்டும்.
அப்போதுதான் யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது தெரியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.