தமிழக செய்திகள்

எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை தாருங்கள்- சபாநாயகர்

சென்னை திருவிக பள்ளியில் மரபு மீறப்பட்டதாக எம்எல்ஏ பல்லவி மனு அளித்துள்ளார்.

எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை தாருங்கள் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சென்னை திருவிக பள்ளியில் மரபு மீறப்பட்டதாக எம்எல்ஏ பல்லவி மனு அளித்துள்ளார். திருவிக பள்ளியில் நடந்தது இனி நடைபெறாது என நம்புவதால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அரசு விழாக்களுக்கு எம்எல்ஏக்களுக்கு முறையாக அழைப்பு விடுத்து அதிகாரிகள், ஆட்சியர்கள் மரியாதை தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.